tag:blogger.com,1999:blog-203465062024-03-13T11:36:35.821+11:00+ள்"விகுதி"கீர்த்தனாhttp://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-20346506.post-40366129756457799482007-10-10T20:05:00.000+10:002007-10-10T20:21:50.198+10:00பழைய-- புது ...இருப்புக்கள்<span><span style="font-weight: bold; text-decoration: underline;"></span><br /></span><p><span>பரந்த வெளியில் .. சிதறுண்டு கிடக்கிறது என் பழைய இருப்பு</span></p> <p><span>வெள்ளை மல்லிகை மலர்களில் மென்இதழ்களாய்..</span></p> <p><span> </span></p> <p><span><br /></span></p><p><span>கரு முகிலும் வெண்பனியும்</span></p> <p><span>சருகுகளை ஸ்பரித்து செல்லும் மென்காற்றும் கூட </span></p> <p><span>அதை நாசம் செய்யலாம்..</span></p><p><span>யாருமற்ற அநாதையாய் ..ஏங்கித்தவித்து..</span></p> <p><span>மெதுமெதுவாய் அது வாடிப்போகும்….</span></p> <p><span> </span></p><p><span><br /></span></p><p><span>காதலால் கட்டுண்ட என் விலங்குகள் அறுந்து </span></p> <p><span>வானவெளியெங்கும் கருமுகில்களை சுற்றியவாறு</span></p> <p><span>பரந்தது....</span></p><p><span> ..காணாமல் போனது..!!<br /></span></p> <p><span><br /></span></p><p><span>நீங்கள் யாரும் உங்கள் நாசம் செய்யும் </span></p> <p><span>துர் வாடை வாயினால்…</span></p> <p><span>எந்த ..கேள்வியும் கேட்க வேண்டாம்..</span></p> <p><span>என் இருப்பற்றுப்போன கதைகளை என்னிடம் கிளற வேண்டாம்..</span></p> <p><span> </span></p> <p><br /></p><p>என் புது இருப்பு..</p><span></span><p><span> </span></p> <p><span>பூக்கூடைகளில் இருந்து..</span></p> <p><span>ரோஐாக்களையும் .. அல்லிகளையும் </span></p> <p><span>அள்ளியெடுத்தபடியும்..</span></p> <p><span>அவ்வப்போது தென்படும் தென்றலுக்கு முத்தம் கொடுத்தபடியும் </span></p> <p><span>தொடரும்..!!!</span></p><br />10/10/2007கீர்த்தனாhttp://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-20346506.post-40592704944927226112007-08-28T03:23:00.000+10:002007-08-28T03:28:30.969+10:00ஆண் வண்டின் காதல்!!!காலை வேளை வீடு வந்த சிறிய வண்டு<br />மலர்களை தேடிய களைப்பில் அழுதது.<br /><br />விடியும் வேளை வண்டின் அழுகை கவலை ..<br />மலரில்லா மரங்கள் கொடிதெனச்சொல்லியது.<br />வசை மாரி பொழிந்தது ..<br /><br />காடுகளில் மலர் தேடி அலைந்த கடுமை சொன்னது..<br />தன் துணை தவறவிட்ட கொடுமை சொன்னது..<br />சிணுங்கிய கணங்களும்.. கதறி அழுத நினைவுகளும்..<br /> காற்றில் கடலில் கரைந்ததாய் தான் தேடி அலைந்ததாய்<br />கூறி அழுதது..<br />மயங்கி விழுந்துகீர்த்தனாhttp://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-20346506.post-8502030989575891042007-07-17T03:10:00.000+10:002007-07-17T03:13:47.560+10:00கருவறைசுட்டெரிக்கும் ஒரு பகல் பொழுது…<br /> அன்று சூரியன் மிக அருகில்<br />இருந்தது..<br /><br />என் கண்ணால் ஓழுகும் நீர் கண்டு<br />தெரு நாய் ஒன்று என் கால் நக்கியது.<br />மனிதர்கள் .. ஏராளம். அங்குமிங்குமாய்<br />ஐந்துவை பார்ப்பதாய் .. பார்த்து ..<br />பார்த்து .. சென்றனர். .<br /><br />என் இதயம் பெரிதாய் ஓலமிட்டது.<br />மனிதர் முன் அழாதே….<br />“அதை விட கேவலம் எதுவும் இல்லை”<br />கண் கேட்க மறுத்தது..<br />சல சல வென.. கண்வழி நீர் .. உடலையும்<br />நனைத்தது…<br /><br /><br />மனம் ஏதேதோ சொன்னது …<br />பரியத்துக்குரியவர் யாரும் நினைவில்<br />இல்லை….<br />தொலை பேசி எண்கள் ..<br />மூளையை விட்டு மிக வேகமாய் ஓடித்தொலைந்து…<br /><br />ஒரு காலத்தில்….<br />எனக்கு எல்லாமுமாக இருந்த என் சொந்த வீடு<br />இன்னும் கொஞ்ச நேரத்தில் ..<br />வெட்டி அகற்றப்பட போகிறது..<br />என் தாயின் கருப்பை..<br /><br /><br />நான் சூன்யமானேன்..<br />வடிவமில்லா எழுத்துக்கள் .. சொற்களில்லா<br />மொழிகள் ..என ..நான் சூன்யமானேன்..<br /><br />இல்லாத கடவுளர்களை எல்லாம் உதவிக்கு<br />அழைத்தேன்..<br />கடவுள் இல்லை என்று சொல்லி வாதிட்ட ..<br />என் வாதங்களை மீ்ட்டுக்கொள்ளுவதாக<br />கெஞ்சினேன்…<br /><br />மண்டியிட்டு அதற்க்காக மன்னிப்பும் கேட்டேன். .<br />எதை நம்ப சொன்னாலும் நம்பும் நிலையில் இருந்தேன்..<br />ஐயோ .. நேத்தி கூட வைத்தேன்..<br /><br />எனது பலம் என்னை விட்டு<br />தூர ஒடிப்போனது …<br />நான் ஒன்றுமில்லாதவள் ஆனேன். ..<br />மனதால் நிர்வாணமானேன்…<br /><br />எல்லாம் முடிந்து இருக்க வேண்டும் ..<br />நான் சுய நினைவிற்க்கு வந்த போது..<br />அப்போது களைத்திருந்தேன்.கீர்த்தனாhttp://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.com9tag:blogger.com,1999:blog-20346506.post-18922738220705883442007-06-14T06:07:00.000+10:002007-06-14T19:35:55.970+10:00மெலிந்த பல்லியுடனான உரையாடல்!விடியலை எதிர் நோக்கி...<br />அண்ணாந்து வானத்தை<br />பார்த்த வண்ணம் இருக்கிறது பல்லி.<br />சின்ன பல்லி. ..<br />பச்சையும் நாவலுமாய் அதன் நரம்புகள்..<br />பார்ப்பதற்க்கு பாவமாய் மெலிந்தும் இருக்கிறது..<br /><br />நாக்கை எடுத்து ஏதோ சொல்ல எத்தனித்தாய் ..<br />உச்சு கொட்டியபடி என்னை<br />உற்றே பார்க்கிறது.<br />கடுகினை ஒத்த அதன் கண்ணிரண்டையும்<br />உருட்டியே பார்க்கிறது.<br /><br />நான் உற்று பார்க்கிறேன்...<br />அதன் கண்விழிக்குள்.<br />ம்…<br />ஏக்கம் .. கோவம் தனிமை ……<br />எந்த மொழியில் சொல்லும் பல்லி..?<br /><br />இந்த இராப்பொழுதில் யாருமற்று<br />நானும் பல்லியும்<br />தனித்தே இருக்கிறோம். ..<br />மெல்லிய குரலில் “ச்சு ச்சு ச்சு”<br />என்று சத்தம் கொடுத்தேன்..<br /><br />பல்லி "பேச்சு" கொடுத்தது.<br />நான் பயந்து வியந்து பிரமித்தேன்..<br /><br />உறங்காமல் விழித்திருந்து ..<br />அழுது சோர்ந்து …<br />கறுத்து சிறுத்திருந்த என் விழிகளை<br />தன் மெல்லிய வாலால் தடவிற்று.<br /><br />தனிமை.. இரவு …அழுகை..<br />கொடுமை …<br />பல்லிக்கு புரிந்தது..<br />சில மனிதர்க்கு புரிவதில்லை!<br /><br />“இலங்கை… என் நாடு..<br />என் தாய் நாடு..<br />அம்மம்மா வீடு …அம்மா தம்பி<br />சித்தி<br />வளவு….மண்..<br />உறவுகள்…”<br /><br />பல்லியின் வால் ஸ்பரிசத்தில்<br />உளறத்தொடங்கியிருந்தேன்..<br /><br />பல்லியுடனான பேச்சுக்கள்<br />நீண்டு வளர்ந்தன..<br />இலங்கையின் போரினை போல..<br /><br />முடிவில்…<br />பல்லியும் நானும் சேர்ந்தே அழுதோம்.!!கீர்த்தனாhttp://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-20346506.post-49122468366854888972007-06-05T06:02:00.000+10:002007-06-06T17:13:03.277+10:00நீரடி எந்திரரை உருவாக்குதல் - Making of Underwater Robotகடந்த நான்கு மாதங்களாய் எனது உறக்கத்தை கெடுத்து கொண்டு இருக்கும்<br />தலையிடி இந்த நீருக்கடியில் இயங்கும் எந்திரர் தான்.<br /><br />இந்த வருடம் எனது கலாசாலை சார்பில் எந்திரர் போட்டியில பங்களிப்பு செய்ய போகும் எந்திரரை செய்யும் பணி பொறியற்பீட மாணவர்களாகிய எனக்கும் என்னுடன் சேர்த்து இன்னும் மூன்று மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.<br /><br /><br /><p><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_NSsrmU2mOAI/RmR32J3KuUI/AAAAAAAAAB0/zcSW4uuX2xg/s1600-h/DSC00478.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5072310852569971010" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: pointer; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_NSsrmU2mOAI/RmR32J3KuUI/AAAAAAAAAB0/zcSW4uuX2xg/s320/DSC00478.JPG" border="0" /></a><br />சிங்கபூரில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் <a href="http://guppy.mpe.nus.edu.sg/srg/">எந்திரர் போட்டியில் (Singapore Robotic Games)</a>கடந்த வருடம் தான் ( 2006ம் ஆண்டு) நீரடி எந்திரர் அறிமுகப்படுத்தப்பட்டது.<br /><br />இதையே எங்களது இறுதியாண்டு குழு ஒப்படையாகவும் செய்யவிருக்கிறோம்.<br />வெற்றி பெற்றால் 1000 வெள்ளி( சிங்கபூர் டொலர்கள்).அத்துடன் தங்கப்பதக்கங்களும்.<br />நாங்கள் செய்யவிருப்பது புறத்திலிருந்து கட்டுபடுத்தும் நீருக்கடியிலான எந்திரரை.( Remote controller under water Robot)<br /><br />பல தரப்பிலும் இருந்து போட்டியாளர்கள் பங்குபற்றுவார்கள்.<br />முதலாம் இரண்டாம் மூன்றாம் பரிசுகளுக்கு முறையே தங்க வெள்ளி வெண்கலப்பதக்கங்களும் காசும் பரிசாக கொடுக்கப்படும்.<br />போட்டிக்கான விதிகளும் ஒழுங்கு முறைகளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp0.blogger.com/_NSsrmU2mOAI/RmR4YJ3KuVI/AAAAAAAAAB8/GZX4u1zlMgY/s1600-h/DSC00483.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5072311436685523282" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: pointer; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_NSsrmU2mOAI/RmR4YJ3KuVI/AAAAAAAAAB8/GZX4u1zlMgY/s320/DSC00483.JPG" border="0" /></a><br /><br />நுண்ணறிவு எந்திரர்.(Intelligent Robot) என்பது போட்டியில் ஈடுபடுத்தப்படும் எந்திரர் வகைகளுள் ஒன்று.<br /><br />அதன் கடமை நிறப்பந்துக்களை பிரித்து உணர்ந்து அவற்றை சேகரித்து அப்பந்துகளை அவற்றுக்குரிய தனித்தனி பெட்டிகளில் இடவேண்டும்.<br /><br />இவ்வெந்திரரின் ஓடுதளம் “L” வடிவிலமைந்தது.அவ்வோடுதளத்தில் ஓடி பந்துகளை சேகரித்து அவற்றை அவற்றுக்கே உரிய சரியான நிறப்பெட்டிகளில் பிரித்து இடவேண்டும்.<br /><br />போட்டியில் நேரம் முக்கியமான விடயமாகும்.உதாரணமாக போட்டியில் பங்குபற்றிய இரண்டு எந்திரர்கள் தங்களுக்காக கொடுக்கபட்ட வேலையை செவ்வனவே செய்து முடித்து இருப்பின் எந்த எந்திரர் குறுகிய நேரத்தில் அவ்வேலையை செய்து முடித்ததோ அதையே பரிசுக்குரிய எந்திரராக தேர்ந்தெடுப்பர்.<br /><br /><br />நீருக்கடியில் இயங்கும் எந்திரர்கள் விசித்திரமானவை..<br /><br />கடந்த ஆண்டே போட்டியில் சேர்க்கப்பட்டு இருப்பதால் அவ்வளவு சுலபமாக செய்ய கூடியவை அல்ல.<br /><br />நீருக்கு அடியில் இயங்க செய்ய வேண்டும் என்பதால் நீர்தடுப்பு செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.<br /><br />பரீட்ச்சார்த்த முயற்ச்சிகள் கூட மிகவும் கவனமாகவே செய்யப்பட வேண்டும்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://bp1.blogger.com/_NSsrmU2mOAI/RmR40Z3KuWI/AAAAAAAAACE/74_p1bPXF10/s1600-h/DSC00484.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5072311922016827746" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: pointer; TEXT-ALIGN: center" alt="" src="http://bp1.blogger.com/_NSsrmU2mOAI/RmR40Z3KuWI/AAAAAAAAACE/74_p1bPXF10/s320/DSC00484.JPG" border="0" /></a><br />எந்திரர்களின் செயற்பாட்டை அடிப்படையாக கொண்டு அவற்றை இரு வகையாக பிரிக்கலாம்.<br /><br />1.தானியங்கி எந்திரர்.<br />2.புறத்திலிருந்து கட்டுபடுத்தும் எந்திரர்.<br /><br />தானியங்கி எந்திரர். தனக்குரிய பணிகளை தானே செய்யும்.<br />ஆளியை(switch) தட்ட வேண்டியது மட்டும் தான் மனிதர்களின் வேலையாக இருக்கும்.<br /><br />புறத்திலிருந்து கட்டுப்படுத்தும் எந்திரர்களுக்கு மனிதரும் சேர்ந்து இயங்க வேண்டும். தொலைவியக்கியை(Remote controller) பயன்படுத்தியே இவ் எந்திரர்களை இயக்கலாம்.<br />தொலைவியக்கியைநாம் எப்படி கையாளுகிறோம் என்னும் அடிப்படையிலேயே அவை இயங்கும்.<br />உதாரணமாக முன் செல்லும் பொத்தானை அழுத்தினால் முன் செல்லும்.<br />பின் செல்லும் பொத்தானை அழுத்தினால் பின் செல்லும்.<br /><br /><br /><br />போட்டி விதிகளுக்கமைய ஒரே குழுவினால் இரண்டு எந்திரர்களை கூட<br />போட்டியில் பங்கேற்க செய்யலாம்.<br />ஆனால் அவை ஒத்தவையாக இருத்தல் கூடாது. தோற்றத்திலோ கையாளப்படும் தொழில்நுட்பத்திலோ.<br /><br />நீருக்கடியிலான எந்திரர் செய்ய வேண்டிய பணி:-<br /><br />“L “வடிவிலமைந்த நீர் நிரப்பப்பட்ட தொட்டியின் நடுப்பகுதியில் பதினாறு காந்தத்துண்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும்.பொருத்தப்பட்டு இருக்கும் அக்காந்ததுண்டுகளை ஒவ்வொன்றாக பொறுக்கி எடுத்து தொட்டியின் இருமுனைகளிலும் போட வேண்டும். (இரண்டு காந்த துண்டுகளை ஒரே சமயத்தில் எடுத்தல் முடியாது).<br />அதே சமயம் இரண்டு முனைகளிலும் சமனாக பிரித்து போட வேண்டும். எட்டு காந்த துண்டுகளை ஒரு முனையிலும் மற்றைய எட்டு காந்த துண்டுகளை மற்றைய முனையிலும் இட வேண்டும்.<br /><br />எந்திரரை இயக்குவதற்கு பேசிக் ஸ்ட்டாம்ப் நிரலாக்கத்தை(Basic stamp programming) பயன்படுத்தலாம்.வேறு நிரலாக்கங்களையும் பயன்படுத்தலாம்.</p><p>பேசிக் ஸ்டாம்ப் தட்டின் படம் (Basic stamp board)<br /><br /><br /><br /></p><p><a href="http://bp1.blogger.com/_NSsrmU2mOAI/RmRyxZ3KuRI/AAAAAAAAABc/8ChIc1fS09w/s1600-h/DSC00482_1.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5072305273407453458" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 304px; HEIGHT: 204px; TEXT-ALIGN: center" height="185" alt="" src="http://bp1.blogger.com/_NSsrmU2mOAI/RmRyxZ3KuRI/AAAAAAAAABc/8ChIc1fS09w/s320/DSC00482_1.JPG" width="298" border="0" /></a><br /><br />மிக இலகுவாக கற்று கொள்ள கூடிய நிரலாக்கம் (programming) தான் Basic stamp.<br />i micro போல கடினமானது அல்ல.<br />ஆனால் வேகம் குறைந்தது எனும் குற்றச்சாட்டு சிலரிடம் உண்டு.<br />வேகத்துக்காகவே i micro வை தாங்கள் உபயோகிப்பதாக நண்பர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்.<br />ஆனால் பாவனையாளர்களின் பயன்பாடு குறித்த தேவையையும் கருத்திற் கொள்ள வேண்டும்.<br /><br /><br />முதற்கட்டமாக எந்த சிக்கலும் இல்லாமல் நிரலாக்கம் (programming) எழுதி முடித்தாயிட்டு.<br />ஆனால் பரிதாபகரமாக நாங்கள் எதிர்பார்த்த செயற்பாட்டை நாங்கள் வடிவமைத்த முன்வடிவம்(first prototype) தரவில்லை.எங்களது நிரலாக்கத்திற்க்கு அமைய வடிவமைப்பு இயங்கவில்லை.என்பதே பிரச்சினைக்குரிய காரணம்.</p><p><a href="http://bp0.blogger.com/_NSsrmU2mOAI/RmRz6J3KuSI/AAAAAAAAABk/d68qs2d2uAs/s1600-h/DSC00480.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5072306523242936610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 344px; HEIGHT: 212px; TEXT-ALIGN: center" height="182" alt="" src="http://bp0.blogger.com/_NSsrmU2mOAI/RmRz6J3KuSI/AAAAAAAAABk/d68qs2d2uAs/s320/DSC00480.JPG" width="313" border="0" /></a><br /><br />ஆதலால் இன்னும் ஒரு வடிவத்துக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.<br /><br />இரவுகளும் பகல்களுமாக எந்திரரின் முன்னமைப்பை செய்து முடிக்க சென்ற காலம் கவலையை அளிக்கிறது.<br /><br />நினைவுகளில் இருக்கட்டும் என எந்திரரை புகைப்படம் பிடித்து வைத்திருக்கிறேன்.<br /><br />:-(<br /><br /><br /><a href="http://bp0.blogger.com/_NSsrmU2mOAI/RmR0RJ3KuTI/AAAAAAAAABs/CnNV1TuEVEs/s1600-h/DSC00479.JPG"><img id="BLOGGER_PHOTO_ID_5072306918379927858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; TEXT-ALIGN: center" alt="" src="http://bp0.blogger.com/_NSsrmU2mOAI/RmR0RJ3KuTI/AAAAAAAAABs/CnNV1TuEVEs/s320/DSC00479.JPG" border="0" /></a></p>கீர்த்தனாhttp://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-20346506.post-85520865841356368902007-06-03T06:25:00.000+10:002007-06-03T06:29:55.769+10:00பெண்ணின் மடிஅடர்ந்த காடுகளின் நடுவே ஓடிக்கொண்டு இருக்கிறது …..<br />சொல்லோணா துன்பங்களில் இருந்து விடுபட்டு..<br />மெளனித்து விடுபட்டு மெளனித்து..<br /><br />காட்டு பூனைகளிடத்தும்…..<br />இன்னும் சில காட்டு மிருகங்களிடமும் பேச்சு கொடுத்த படி <br />இடை இடையே.. கொட்டாவியும் விட்டபடி ..<br />சலிப்பில் விசும்பிய படி .. <br />இனம் தெரியா மொழிகளில் ஊளையிட்டபடியும். <br /><br />வெளிச்சத்தை தான் தேடி ஒடுகிறது. <br />பாலைவனங்களில் புதைத்து விட்ட .. <br />தகிப்பான ரகசியங்களை காவு கொண்டபடி <br /><br />ஏதாவது புசிக்க கொடுக்க வேண்டும் .. <br />களைத்து களைத்து மூச்சிரைக்கிறது. <br />தண்ணி வேணாம் என்கிறது ..<br />மோரும் வேணாம் என்கிறது.. <br />சோறு வேணாம் என்கிறது ..<br />எதை தான் கொடுப்பது .. <br /><br />அலறிக்கொண்டே இருக்கிறது..<br />இனம் தெரியா .. ஏதேதோ மொழிகளில் <br />கண்ணீருக்கு சமானமாய் ஏதவது இருப்பின் <br />குடிக்க தா என்கிறது…<br /><br />விழிகள் அகல விரித்து.. காட்டு மரங்களிடையே.. <br />ஒழிந்திருக்கும் பற்றையையும்... <br />அதிலே.. எட்டி எட்டி பார்த்து மறையும் <br />இனம் தெரியா வண்டினங்களையும் ஊர்வனங்களையும்... <br />கேள்விக்குறியோடு பார்க்கிறேன்..<br /><br />கண்ணீருக்கு சமானமாய் ஏதாவது தா…தா..<br />இந்த முறை ..மிக ஆவேசமாய் ஓடத்தொடங்குகிறது <br />எதிரில் எதிர்பட்ட கொடிகள் .. மரக்கொப்புகள். <br />முகில்களும் கூட இரண்டாய் பிளவு பட. <br /><br /><br />முடியாமையின் உச்சம் தான் .. <br />காட்டு மிருகங்கள்.. அலறி ஓடுகிறது .. <br />பேரிரச்சல் வான வெளி எங்கும்... <br />பரந்து விரிந்து வியாபித்து .. <br /><br />காடு முடிந்து .. <br />வயல் ….<br />வயல் .. பச்சை பசேல் என கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயல். <br />நெல்லை தின்டாவது .. பசியை போக்கும் என.. <br />பார்கிறேன் <br /><br />நெல் வயல் மேலே.. இரைந்து இரைந்து போனதில்<br />வயலின்.. நிலம் இரண்டாய் பிளவு பட்டு <br />பிளவுண்ட இடத்தில் இருந்து <br />தண்ணீர் . ஒரு நீர் வீழ்ச்சியை போல..<br /><br />இன்னும் தான் .. <br />ஓடுகிறது <br /><br />மலை.. <br />மலையடிவாரங்களின் வழியே..<br />மனிதர்களை எல்லாம் திட்டி தீர்த்தபடியே ஓடுகிறது. <br />இனம் தெரியா .. பேரிரச்சலுடன். <br /><br />ஓடி ஓடி ஓடி <br />களைத்து .. <br />ஒரு பெண்ணின் காலடியில் குந்துகிறது. <br />அம்மாவின் முக சாயல். <br />பெண் அழுகிறாள் …<br />தலையை கொஞ்சம் தடவி விடுகிறாள். <br /><br />ஓடி ஓடி வந்த களைப்பில்.. <br />மூச்சிரைக்கிறது.. <br />இப்போது ஓவென்று ஓவென்று .. <br />மிக இரைச்சலான சத்தத்துடன்.. <br />அழ தொடங்கிற்று..<br /><br />அழுகை பேரிரச்சல் கொஞ்சமாய் கொஞ்சமாய் குறைந்து <br />முனகலாய்...<br />அழ தொடங்கிற்று. <br />அழுது அழுது அழுது.. <br />முடியாமையின் . .. … விழிம்பில்..<br /><br />அப் பெண்ணின் ஒரு மடி இரவல் கேட்டு ..<br />மயங்கி விழலாயிற்று .. <br />அப்படியே மயங்கி விழலாயிற்று…!!கீர்த்தனாhttp://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-20346506.post-36952456307601598632007-05-29T16:57:00.000+10:002007-05-29T17:43:19.580+10:00ஆண் சிலந்திகள்..!என்னுள்ளே சில சிலந்திகள் <br />அத்துமீறி பிரவேசித்து...<br />என் பனி படர்ந்த இதயத்தை மெதுவாய் முத்தமிடும்<br />அந்தரத்தில் அவை வலைகட்டி தொங்கும்...<br /><br />என்றென்றோ புதைத்த...<br />மன ஆழ கிடங்குகளில் இருக்கும்<br />கறைபடிந்த ஏடுகளையும் கறை படியா ஏடுகளையும் <br />கிளறி எடுக்கும்...<br />கேள்வி எழுப்பும்...<br /><br />எண்ணற்ற மொழிகளில் எழுதிய <br />சாபங்களில் சுவட்டை..<br />நாக்கால் நக்கும்..<br />சாபங்கள் சிலந்திக்கும் சாபமிடும்..<br />சிலந்தி கேள்வி எழுப்பும்...<br /><br />ரணமான கணங்களில்...<br />கசிந்த இரத்த கறைகளை<br />மோப்பமிடும்..<br />ஏன் ஏன் .. ஏன் .. <br />என்று கேள்வி எழுப்பும்..<br /><br />அர்த்தம் இல்லா சிலந்தியின் கேள்வியில் <br />இதயம் சலிப்படையும்<br />நான் பெண் என்று சொல்லும்...<br /> <br />சிலந்தி சிரிக்கும் .....<br />பதில் கிடைத்த ஆவேசத்தில்..<br />சிரிக்கும்........<br />சிரித்து கொண்டே இருக்கும்...<br />இரத்த நாடிகள் நாளங்கள் எங்கும் <br />சிலந்தியின் சிரிப்பதிர்வுகள் பரவும்..<br /><br />சிலந்தி மீண்டும் தோண்டும்..<br />காரணம்..தேடி தோண்டும்<br />இதயம் வலியில் துடிக்கும்<br />வேண்டாம் என்று கெஞ்சும்...<br /><br />சிலந்தி தோண்டும்..<br />ஆண் பலத்துடன் தோண்டும்..<br />கேள்வி எழுப்பும்...<br />சிலந்தி கேள்வி எழுப்பும்..<br /><br />இதயம் மெளனித்து இருக்கும்.<br />சிலந்தி மீண்டும் மீண்டும் <br />கேள்வி எழுப்பும்..<br />இதயம் மெளனித்தே இருக்கும்..<br /><br />வலிகளின் உச்சம் இதயம் இரத்தம் கசியும்..<br /><br />சிலந்தி தோண்டும்..<br />கிழித்து குதறி தோண்டும்..<br />தன் முழு பலத்துடன் தோண்டும்..<br />தோண்டிக்கொண்டே இருக்கும்..<br /><br />வலிகளின் உச்சம் புறககணிப்புகளின் உச்சம் <br />இதயம்...<br />சிரிக்கும்... சிரிக்கும் <br />ஆவேசமாய் சிரிக்கும்...<br />அதிர்ந்து அதிர்ந்து சிரிக்கும் <br />சிரிக்கும்...<br /><br />சிரிப்பதிர்வில் .. சிலந்திகள் <br />வெடித்து சிதறும்..<br />சிலந்திகள் வெடித்து சிதறும்!!!கீர்த்தனாhttp://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-20346506.post-23786087808866590642007-05-29T06:30:00.000+10:002007-05-29T18:32:07.295+10:00என்னை உறங்க விடுறீங்களே இல்லை.<div>உடைந்து போய் இருக்கும் தருணங்களில் ஆறுதல் அளிப்பது கவிதையும் இசையும் மட்டும்தான்.....<br /><br /></div><div>அவ்வாறு ஒரு தருணத்தில் மனதை பறி கொடுத்த பாடல் தான்..</div><div>"அஸ் டெக்க பியான" (சிங்கள மொழிப்பாடல்)</div><br /><div> </div><div>ருகாந்த குணதிலக எனக்கு மிக பிடித்த சிங்கள மொழிப்பாடகர்.</div><br /><div>இசைக்கு மொழிகள் தேவையில்லை தான் இருப்பினும் அர்த்தம் உணர்ந்து கேட்டும் போது மனம் லயித்து போவது உண்மைதானே...</div><br /><div> </div><br /><div style="color: rgb(0, 102, 0);">சிங்களத்தில் :- கவிஞர் பெயர் தெரியவில்லை<br /></div><br /><div style="color: rgb(0, 102, 0);">தமிழில் :- கீர்த்தனா</div><br /><div style="color: rgb(0, 102, 0);">பாடலை பாடியவர் :- ருகாந்த குணதிலக</div><br /><center><br /><object height="80" width="315"><param name="movie" value="http://www.ijigg.com/jiggPlayer.swf?songID=V2CC4DFPA0&Autoplay=0"><param name="scale" value="noscale"><param name="wmode" value="transparent"><embed src="http://www.ijigg.com/jiggPlayer.swf?Autoplay=0&songID=V2CC4DFPA0" scale="noscale" wmode="transparent" height="80" width="315"></embed></object><br /></center><br /><span style="font-size:100%;"></span><br /><div> </div><blockquote><br />கண்களிரண்டையும் மூடி என்னால் உறங்க முடியவில்லை.<br />இல்லை.... இல்லை ....<br />என்னால் உறங்கவே முடியவில்லை.<br /><br />மார்புக்குள் துடித்துக்கொண்டு<br />என் மனதில்... நடந்து கொண்டிருக்கும்<br />நீங்க<br />என்னை உறங்க விடுறீங்களே இல்லை.<br /><br />மனதை ஒருமுகப்படுத்தி உறங்க நினைத்தால்<br />அதற்கும் நீங்க இடம் விடுறீங்க இல்லை.<br /><br />மிகநெருங்கி வந்து..<br />நீங்க செல்லம் கொஞ்சும் போது<br /><br />எனக்கும் உறங்கத் தேவையே இல்லை.<br /><br /><br /><br />ரகசியம் ஒன்று சொல்ல இருக்கு.<br />உங்கட காது மடல்களுக்கு<br />மிக அருகாமையில்.<br /><br />நீங்க துராத்தில் இருப்பதால<br />என்னால சொல்ல முடியவில்லை..<br />மற்றவர்களுக்கும் அது கேட்டு விடுமென்பதால்.<br /><br />என் தங்கமே.......<br />இதயத்தை துன்புறுத்தாமல்<br />நெருங்கி வாங்க....<br />காதலோடு.<br /><br />சொல்வதற்கு எனக்கு நிறைய விடயங்கள் இருக்கு<br />இறுக்கமான அணைப்பினுடான காதலோடு.<br /><br /><br />கண்களை மூடி என்னால் உறங்க முடியவில்லை.<br />இல்லை இல்லை<br />என்னால் உறங்கவே முடியவில்லை.<br /><br />மார்புக்குள் துடித்துக்கொண்டு<br />என் மனதில் நடந்து கொண்டிருக்கும்<br />நீங்க<br />என்னை உறங்க விடுகிறீங்களே இல்லை.<br /><br />மனதை ஒருமுகப்படுத்தி உறங்க நினைத்தால்<br />அதற்க்கும் நீங்க இடம் விடுகிறீங்க இல்லை.<br /><br />மிகநெருங்கி வந்து<br />நீங்க செல்லம் கொஞ்சும் போது<br /><br />எனக்கும் உறங்கத் தேவையே இல்லை.</blockquote><br /><br /><br /><br /><div> </div><br /><div> </div>கீர்த்தனாhttp://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-20346506.post-82898815672155332002007-05-25T18:28:00.000+10:002007-05-28T19:31:44.883+10:00வறுமை- மாடு- மனிதன்.சூரிய வெப்பம் ஏன் இப்படி கொதிக்குது?<br />கடல் மண் ஏன் வெப்பமாய் இரிக்கி?<br />கடவுளின் படைப்பு !!!???<br /><br />ஓ அப்படியா..<br /><br />நாம ரண்டு பேரும் ஏன் இந்த கிழட்டு ஆமைக்கு பின்னால போய் கொண்டு இரிக்கம்?<br /><br />இந்த ஆமை முட்டை போட தான் போய் கொண்டு இரிக்கி.<br />முட்டைய எடுத்தம் என்டா இன்டைக்கு இரவைக்கு வயிறார தின்னலாம்.<br /><br />ஆமை கடற்கரை க்கு வாற முட்டை போடுறதுக்க?<br /><br />ஓம்.. அம்மை சொல்லியிருக்காவு.<br /><br />வெறும் காலோட இன்னும என்னால ஒரு அடி கூட எடுத்து வைக்க ஏலா. மண் சுடுது.<br /><br />உன்னால எப்பிடி ஏலுது?<br /><br />என்னால ஏலும்……<br /><br />எனக்கு பசிக்கு வயிறு முட்ட தின்ன ஏதாவது வேணும்<br />கால் கொந்தளிச்சு .. காலே இல்லாம போனாலும் பரவால்ல.<br /><br />என்னால இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்க ஏலா .. உயிரே போயிடும் போல இரிக்கி.<br /><br />உனக்கு இந்த கடற்கரை ஓரமா இரிக்கிற பற்றை செடியால செருப்பு செஞ்சு தாறன்.<br /><br />ஓம்……கெதியா செஞ்சு தா சுணங்காத..<br /><br />இப்ப முடியுதா?<br /><br />கனக்க இல்ல கொஞ்சமா சுடுது..<br /><br /><br />கொஞ்சம் பொறன்டி.. இன்னும் கொஞ்ச துரம் போனா ஆமை முட்ட போடும் அத புறக்கி போவம்<br />ஆமை முட்ட நல்ல சத்து “அம்ம “ சொல்லியிருக்காவு.<br /><br />ம்…சரி…<br /><br />ஆமை எத்தின முட்டை போடும்?<br />ஆமை ஆயிரம் முட்டைய சத்தம் இல்லாம போடுமாம்.<br /><br />ஓ……<br /><br />சரி அப்ப கட்டாயம் எல்லாருக்கும் போதுமாயிரிக்கும்.<br />எனக்கு உனக்கு அம்மைக்கு .. மற்ற எல்லாருக்கும்…<br /><br />குடிச்சு போட்டு கந்தோரில படுத்திரிக்கிற அப்பாக்கும் போதுமா இரிக்கும் என்ன?நிறைய நாளைக்கு..?<br /><br />ம்…<br /><br />அப்பா ஏன் குடிக்கிறவரு?<br />அவருக்கு கவலையா?<br />அம்மைக்கு தானே நிறைய கவலை அப்ப அம்ம ஏன் குடிக்கிறது இல்ல??<br /><br />அம்ம "பொம்பிள" குடிக்க மாட்டாவு.<br /><br />அப்ப பொம்பிளையள் குடிக்க ஏலாதா?<br /><br />ஏலா. ..பொம்பிளையள் அடக்க ஒடுக்கமா இரிக்க வேணும்.<br />வாயில மண் இல்லாட்டி.<br /><br />ஏன் ????<br /><br />தெரியாடி….எனக்கு…!!<br /><br />அப்பாக்கு என்ன கவலை?<br />அவருக்கு அம்மைய பிடிக்க இல்லையா?<br /><br />தெரியாடி ….இந்த மாதிரி உன்ட லூசு கேள்விய எல்லாம்<br />இரவில நட்சத்திரம் எண்ணுவியே படிக்காம… அப்ப கேளு..<br />இல்லாட்டி அப்பருட்ட கேளு…<br /><br />அக்க .. கால் சுடுது.. நீ செய்த செருப்பு சரியில்ல.<br />வா நாம வீட்ட போவம்..<br />ஆமை முட்டை போடாது அக்க …!<br />நாம திரும்பி போவம் வா……<br />அந்த கிழட்டு சனியன் பிடிச்ச ஆமை போய் கொண்டே இரிக்கி ..<br /><br />பாவம் டி கிழட்டு ஆமை..<br />நாமதானே முட்டைய எடுக்க போறம்…<br />அது பின்னால வா முட்டை குடுக்கிறன் என்டு.உன்ன கூப்பிட்டதா?<br /><br />எனக்கு முட்டை வேணா.நான் வீட்டுக்கு போகோணும்.<br />என்னை வீட்டுக்கு கூட்டித்து போ…<br /><br />நாம மாட்டுக்கு போடுற மரவெள்ளி கிழங்கு வேரை எடுத்து அவிச்சு தின்னலாம். எனக்கு முட்டை வேணா…..<br /><br />சும்மா வாடி ….<br /><br />இல்ல “அக்க”…எனக்கு முட்டை வேணா மரவெள்ளி கிழங்கு<br />போதும்.<br /><br />சரி .. நாம போவம்.<br />எந்த வழியால போறது .<br />பார்க்கிற இடமெல்லாம் ஆமை தடம் தானே இரிக்கி..<br />இது என்ன கோதாரி..!!<br />எங்கயோ இடம் தெரியாம வந்துட்டம் .<br />இந்த கிழட்டு ஆமை எங்கள எங்கயோ கூட்டித்து வந்துத்து.<br /><br />வந்த வழியால திரும்பி போவம் அக்க<br />அப்பிடியே கடலை .. அடியா கொண்டு.<br />வேற வழி இல்ல நமக்கு ..<br /><br />அம்ம மாவிடிக்க போயிருப்பாவு.<br />நாம போய் சேரும் போது சுணங்கிரும்.<br />இனி என்ன பண்ணுறது?<br /><br />வாடி<br />அந்த தெருவால வீட்ட போவம்.<br />பாசிக்குடாக்கு வந்துத்தம் ...!<br /><br />நீதான் ஆமை முட்டைக்கு அவா பிடிச்சு வந்தாய் நான் அப்பவே<br />சொன்னன். வேணாம் மரவெள்ளி கிழங்கு வேர தின்டுபோட்டு கிடப்பம் என்டு.<br /><br /><br /><br /><br />வா .. இது தான் ஆரைப்பத்தைக்கு போற சரியான வழி..<br />போவம் வா..<br /><br />நீ .. என்ன ஏமாத்துறாய்..<br /><br />இல்லடி வா .. இது தான் வழி.<br /><br />ம்…<br /><br />நடந்து நடந்து கால் எல்லாம் நோகுது.<br /><br />கொஞ்ச தூரம் தான்<br />“இந்தா அவ்வடத்துக்க தான் இரிக்கி”<br /><br />ம்…<br /><br />வடிவு சுந்தரிகள் இரண்டு பேரும் எங்க சுத்தித்து வாறாங்களோ???<br />இல்ல அம்ம நானும் இவளும் ஆமை முட்டைக்கு போனம்…<br /><br />மாட்டுக்கு போடுற மரவெள்ளி வேரை புறக்கித்து வர சொன்னா<br />இந்த இடமெல்லாம் விளையாடி திரிஞ்சு போட்டு இப்பதான்<br />வாறாளுகள்...<br /><br />நான் என்னத்த செய்வன் ஒரு புள்ளையா ரண்டு புள்ளையா ..<br />ஒன்பது புள்ளைகள்.<br />எப்பிடி இரணம் குடுப்பன்.<br />சரி ..சோனக தெருவுக்கு போய் மாவிடிச்சு குடுத்துத்து ..சந்தைக்கு போய்...<br />ஏதும் இரணம் வேண்டுற என்டா வேண்டித்து வாறன்.<br /><br />சந்தை கலைஞ்சு போயித்து ..<br />யாதால ஒன்டும் இல்ல..<br /><br />வாழைப்பழ சுழையும் செல்வன் மீனும் தான் இருக்கி<br />ஆக்கி தாறன் தின்னுங்க. செல்வன் மீன் சொதியும் சோறும் நல்லா இரிக்கும் மக்காள்..<br /><br />ம்.. சரி அம்ம ..இவள் சின்னவள்..<br />கிணத்தடியில குழிச்சு கொண்டே இரிக்கிறாள்<br />வாழிய தாறாள் இல்ல எனக்கு குழிக்க.<br /><br />குடுடி வாழிய புள்ள பாவம்.<br /><br />அம்ம பாவம் .. அக்க..<br />எத்தின காலத்துக்கு தான் இப்பிடி ….<br />காலம் இப்பிடியே போயிருமா?<br />அம்மை மாவிடிச்ச காசில தான் ஒரு நேரம் தின்ன வேணுமா?<br />காலமையில மாட்டுக்கு போடுற மரவெள்ளி வேர்தானா?<br /><br />என்டைக்காவது நாம புது சட்டை போட்டு திருவிழாக்கு போய் வருவமா?<br />வயிறு நிறை சோறு தின்னுவமா?<br /><br />ம்…………. நாம மாடா புறந்து இரிக்கலாம் அக்க...<br />புல்லையும் மரவெள்ளி வேரையும் வயிறு முட்ட தின்டு கழிச்சு திரிஞ்சிரிக்கலாம்..!!!<br /><br />(*பாசிக்குடா *ஆரைப்பத்தை( ஆரையம்பதி) *சோனக தெரு – இலங்கையில் மட்டக்களப்பில் இருக்கும் இடங்கள்.<br />*கதையில் கையாளப்பட்டிருப்பது மட்டக்களப்பு பேச்சு வழக்கு தமிழ் )கீர்த்தனாhttp://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-20346506.post-32751629787365740862007-05-25T14:42:00.000+10:002007-05-26T06:33:02.513+10:00கரப்பான்சின்ன அறையில் பல்லி எச்சம் முதுகில் தெறிக்க ..<br />அது குசினி..<br />எனக்கே எனக்காக ஒதுக்கபட்டதிருப்திகரமான செளகரியமான மேசை<br />அது ..கதிரை கையில் போட்ட காய்ந்து இத்து போன பலகை துண்டு.<br /><br />கதிரையும் பலகை துண்டுமாய்..இரவெல்லாம் நான் ..<br /> காலையில் அதுவே எனக்கான இருக்கையாகவும் படுக்கையாகவும் மாறும்.<br />பிறிதொரு நாள் அதுவும் பறிபோனது...<br /><br />இரவு பிடிக்கும் ..<br />மழை இரவு மிகவும் பிடிக்கும்.<br />மழைஇரவு நான் படிக்கதேர்தெடுக்கும் மிக சரியான தருணம்.<br /><br />தொண்டையை அடைத்து வெளிவர முடியாது போன<br />கவலையின் தடயங்களை பூனையுடன் பகிர்ந்து கொள்வதுஅப்பொழுதுதான். ..!<br /><br />அப்படி..<br />ஒரு மழைகால இரவின் போதுதான்..<br />என் பள்ளி சப்பாத்துக்குள் கர கர சத்தம் !<br />பூனையும் நானும் உன்னிப்பானதில் கண்டுபிடித்தது<br />ஒரு உயிர் கரப்பானையும் உயிரற்ற கரப்பானையும்.<br />யாரோ மிதித்து போய் இருக்க வேணும்..!<br /><br />உறவு பிரிந்த கரப்பானின் வலி ..<br />என் உடல் முழுதும் ஒரு கணம் உலுப்பிச் சென்றது.<br /><br />என்றென்றோ அடித்து கொன்ற கரப்பான்களுக்காய்<br />ஒரு முறை முழுதாய் வாய் விட்டு அழுதேன்.<br /><br />இன்று என்வீட்டில் கரப்பான்களே இல்லை..<br />மழை இரவு தான் நெடுகிலும்….கீர்த்தனாhttp://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-20346506.post-15194068957509665872007-05-25T00:57:00.000+10:002007-05-25T04:21:49.156+10:00எண்முறை இலத்திரனியல் - 1வாழ்க்கையே இணையமயமாகி போய்விட்டது.<br />ஆனால் இலத்திரனியல், பொறியியல் , கணினி போன்ற துறைகளில்<br />ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் கிடைக்கும் இணைய தகவல்கள் தமிழில் கிடைப்பதில்லை.<br /><br />தமிழ் மட்டுமே தெரிந்திருக்கும் தமிழர்கள் இத்துறைகளில் தேர்ச்சி அடைய முதலில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.ஆங்கில அறிவு காலத்தின் கட்டாயம். ஆனால் ஏன் அதிலேயே தங்கி இருக்க வேண்டும் என்பது தான் ஆதங்கம்.<br />எண்முறை இலத்திரனியலின் ஆரம்பம் எண்களே.<br /><br /><strong><span style="COLOR: rgb(255,0,0)"></span></strong><br /><strong><span style="COLOR: rgb(255,0,0)">எண்முறைமைகளும் அடிமானங்களும். </span><span style="COLOR: rgb(0,0,0)">(பிரதான எண்முறைகள்)</span></strong><br /><br />1.பத்தடிமான எண்கள்.<br />2.இரண்டடிமான எண்கள்<br />3.எட்டடிமான எண்கள்<br />4.பதினாறினடிமான எண்கள்<br /><br /><strong><span style="color:#33cc00;">பத்தடிமான எண்கள்</span></strong><br /><br />பத்தடிமான எண்களுக்கு மொத்தமாக 10 எண்கள் உண்டு ( 10 digits).<br />அவை 0 – 9 வரையாகும்.பத்தடிமான எண்களின் அடி 10 ஆகும்.<br /><br />உதாரணம் 1:-<br />23535 என்னும் எண்ணுக்கான நிறைகள் (weights) கீழ்வருமாறு எழுதப்படும்.<br /><br /><br /><div style="TEXT-ALIGN: center"><a href="http://bp0.blogger.com/_NSsrmU2mOAI/RlXCV53KuJI/AAAAAAAAAAc/SneAgLEA-cM/s1600-h/base_10.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5068170637240613010" style="WIDTH: 272px; HEIGHT: 87px" height="62" alt="" src="http://bp0.blogger.com/_NSsrmU2mOAI/RlXCV53KuJI/AAAAAAAAAAc/SneAgLEA-cM/s320/base_10.bmp" width="180" border="0" /></a><br /></div><div><br />உதாரணம் 2:-<br /><br /><br /></div><div style="TEXT-ALIGN: center"><a href="http://bp1.blogger.com/_NSsrmU2mOAI/RlXDQJ3KuKI/AAAAAAAAAAk/wFEV-X6MN3A/s1600-h/2.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5068171637967992994" style="WIDTH: 321px; HEIGHT: 40px" height="46" alt="" src="http://bp1.blogger.com/_NSsrmU2mOAI/RlXDQJ3KuKI/AAAAAAAAAAk/wFEV-X6MN3A/s320/2.bmp" width="346" border="0" /></a><br /></div><strong></strong><div><br /><strong><span style="COLOR: rgb(51,204,0)"></span></strong><br /><strong><span style="COLOR: rgb(51,204,0)">இரும எண்கள் (இரண்டடிமான எண்கள்)</span></strong><br /><br />அடி இரண்டை கொண்ட இரும எண்களுக்கு எண்கள் இரண்டு(2 digits) ஆகும்.<br />அவை 0 ,1 .<br /><br />உதாரணம்3:-<br />10111 என்னும் இரும எண்ணுக்கான நிறைகள் கீழ்வருமாறு எழுதப்படும்.<br /><br /><br /></div><div style="TEXT-ALIGN: center"><a href="http://bp1.blogger.com/_NSsrmU2mOAI/RlXG1J3KuLI/AAAAAAAAAAs/LlMQj__ihio/s1600-h/3.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5068175572158036146" alt="" src="http://bp1.blogger.com/_NSsrmU2mOAI/RlXG1J3KuLI/AAAAAAAAAAs/LlMQj__ihio/s320/3.bmp" border="0" /></a><br /></div><div><br />உதாரணம் 4:-<br /><br /><br /><br /></div><div style="TEXT-ALIGN: center"><a href="http://bp2.blogger.com/_NSsrmU2mOAI/RlXHWZ3KuMI/AAAAAAAAAA0/RZhCN4ScWDw/s1600-h/4.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5068176143388686530" height="37" alt="" src="http://bp2.blogger.com/_NSsrmU2mOAI/RlXHWZ3KuMI/AAAAAAAAAA0/RZhCN4ScWDw/s320/4.bmp" width="354" border="0" /></a><br /></div><div align="left"><br /><br /><br /><br />மேற்கண்ட வாறே எண்ம எண்களுக்கும் பதினறும (பதினாறினடிமான) எண்களுக்கும் எழுதப்படும்.<br />எண்ம எண்களுக்கு எண்கள் 8 ஆகும். ( 0 -7)<br />பதினறும எண்களுக்கு எண்கள் 16 ஆகும் (0 -9 வரை A- F)<br />அவையாவன 0,1,2,3,4,5,6,7,8,9,A,B,C,D,E,F.<br /><br /><br /><br /><strong><span style="COLOR: rgb(51,204,0)">இரும எண்களின் வீச்சு</span></strong><br /><br /><br />இரும எண்களினால் எழுதப்பட கூடிய அதிகூடிய எண் 255 ஆகும்.<br />(11111111 (இரண்டின் அடி))<br /><br /><br />சமன்பாடு:-<br /><br /></div><div style="TEXT-ALIGN: center"><a href="http://bp0.blogger.com/_NSsrmU2mOAI/RlXIu53KuNI/AAAAAAAAAA8/hFpxOId-quk/s1600-h/equation_1.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5068177663807109330" height="96" alt="" src="http://bp0.blogger.com/_NSsrmU2mOAI/RlXIu53KuNI/AAAAAAAAAA8/hFpxOId-quk/s320/equation_1.bmp" width="204" border="0" /></a><br /></div><div align="left"><br /><strong><span style="color:#33cc00;">ஒப்பீடு</span></strong></div><div align="left"></div><div align="left"><br /><br /></div><p align="center"><a href="http://bp1.blogger.com/_NSsrmU2mOAI/RlXV3J3KuPI/AAAAAAAAABM/OjG5s-kWdmM/s1600-h/5.bmp"><img id="BLOGGER_PHOTO_ID_5068192099192191218" style="CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_NSsrmU2mOAI/RlXV3J3KuPI/AAAAAAAAABM/OjG5s-kWdmM/s320/5.bmp" border="0" /></a></p><div align="left"><br /></div><div style="TEXT-ALIGN: center"><a href="http://bp0.blogger.com/_NSsrmU2mOAI/RlXMB53KuOI/AAAAAAAAABE/9zMgZ6tOTkA/s1600-h/diagra_1.bmp"></a></div>கீர்த்தனாhttp://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-20346506.post-46919215687567307692007-05-23T03:01:00.000+10:002007-05-23T03:25:48.989+10:00வணக்கம்வணக்கம்<br />வலைப்பதிவிட வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம்<br />பாழாய் போன நேரம் தான் கிடைப்பதில்லை.<br />பகுதி நேர வேலையோடும் படிப்போடும் போராடியே..வாழ்க்கை கழிகிறது.<br /><br />வாய்காரி ஆதங்கம் மேலெழும்பவே நேரத்தை எப்படியோ ஒதுக்கி எழுத வந்திருக்கிறேன்.<br />முடிந்த வரைக்கும் தொடர்ச்சியான பதிவுகளை தர முயற்ச்சிக்கிறேன்.<br /><br />நன்றி.கீர்த்தனாhttp://www.blogger.com/profile/09541898729029673088noreply@blogger.com22