Wednesday, May 23, 2007

வணக்கம்

வணக்கம்
வலைப்பதிவிட வேண்டும் என்பது நீண்ட நாள் திட்டம்
பாழாய் போன நேரம் தான் கிடைப்பதில்லை.
பகுதி நேர வேலையோடும் படிப்போடும் போராடியே..வாழ்க்கை கழிகிறது.

வாய்காரி ஆதங்கம் மேலெழும்பவே நேரத்தை எப்படியோ ஒதுக்கி எழுத வந்திருக்கிறேன்.
முடிந்த வரைக்கும் தொடர்ச்சியான பதிவுகளை தர முயற்ச்சிக்கிறேன்.

நன்றி.

22 comments:

மு. மயூரன் said...

நீங்கள் வலைப்பதிவிடத்தொடங்கியமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் உற்சாகமாக எழுதுங்கள்.

சோமி said...

வாழ்த்துக்கள் கீர்த்தனா.

நிரம்ப எழுதுங்கள். வாய்க்காரிகளின் கதைகள் எப்பவும் கலகமும் சுவாரசியமும் நிறைந்தவை.விரைவில் தமிழ்மணம் போன்ற ஏதொவொரு வலைபின்னலில் இணையுங்கள்.

சினேகிதி said...

வணக்கம் கீர்த்தனா!
நீங்கள் வாய்காரியா :-))நல்ல விசயம்...அப்ப உங்கட வாயைக்காட்டுங்கோ சீ..எழுதுங்கோ.

கீர்த்தனா said...

நன்றி மயூரன் ,சோமி, சினேகிதி..
(நக்கலா போச்சு ..சினேகிதிக்கு.. :-))
நேரம் கிடைக்கும் போது கட்டாயம் எழுதுவேன்.

சினேகிதி said...

"+ள்" இதை எப்பிடி உச்சரிக்கிறது?? விகுதி என்றால் என்ன?? நீங்கள் சரியான கெட்டிக்காரியாம் என்று சொல்லினம் அதுக்காக இப்பிடி வந்த உடன புரியாத பாசைல எல்லாம் பயம் காட்டக்கூடாது சரியா :-) கேட்க கேள்விகளுக்கு ஒழுங்காப் பதில் சொல்லுங்கோ:-)

கீர்த்தனா said...

சினேகிதி…
+ள் என்பதை = சக ள் என்று உச்சரிக்கலாம்.
தமிழில் பகுதி, விகுதி, சாரியை, சந்தி ,என்று சொற்களை பிரிக்கலாம்.
அந்த அடிப்படையில் விகுதி சொல்லின் பின்னால் வருவது.

உதாரணம் :- வந்தாள் என்பதை வந்து +த்+ ஆள்
என்று பிரிக்கலாம்.இதில் ஆள் என்பது விகுதி. (அள், ஆள் பெரும்பான்மையான பெண்பால் விகுதிகள்)
இந்த ஆள் என்பது ஆ+ள் சேர்ந்து வருவது.
ஆக சக ள் = +ள்
புரிகிறதா???

- நான் ஒன்றும் பெரிய கெட்டிக்காரி இல்லை. ஆனால் கெட்டிக்காரி.:-)
உங்கட கேள்விக்கு நான் நல்ல பிள்ளையா பதில் சொல்லிட்டன்.

அம்மா மிரட்டுற மாதிரி என்ன மிரட்டகூடாது . சின்ன பிள்ளை பயந்து போயிடுவன் :-) ..

சுந்தர் / Sundar said...

வாங்க .. வாழ்த்துக்கள்

U.P.Tharsan said...

//தமிழில் பகுதி, விகுதி, சாரியை, சந்தி ,என்று சொற்களை பிரிக்கலாம்.
அந்த அடிப்படையில் விகுதி சொல்லின் பின்னால் வருவது.//

எங்கேயோ கேள்வி பட்ட மாதிரி இருக்கு. :-))

வலைப்பூ(வலைப்பதிவு)பதிய தொடங்கியாச்சா! ம்.. வாழ்த்துக்கள்.

சினேகிதி said...

விளக்கம் எல்லாம் சரிதான் ஆனால் எனக்குத்தான் அதை உங்கட வலைப்பததிவுக்கு பெயரா வைச்சிருக்கிறதுதான் ஏனென்று விளங்காதாம்....

கீர்த்தனா said...

சினேகிதி...
உங்களுக்கு விளங்குற மாதிரி சொல்ல வேணும் என்டால் ...

நான் "பெண்" என்டதால பெண் பால் "விகுதிய" என்ட பதிவுக்கு பெயரா வச்சன்.

புரிந்ததா??? இதுக்கு மேலயும் புரியாட்டி எல்லா வலைப்பதிவாளர்களையும் உதவிக்கு அழைக்க வேணும்.
:-)

அபி அப்பா said...

வணக்"கம்"

மு. மயூரன் said...

கீர்த்தனா,

உங்களுக்கு "ராக்கிங்" நடக்குது.

வலைப்பதிவுலகத்துக்கு புதுசா வாற ஆக்கள பகிடிவதை பண்ணுற குழப்படிக்கார பிள்ளைகளிட குழுவுக்கு சினேகிதிதான் தலைவி எண்ட மாதிரி அறிஞ்சு வச்சிருக்கிறன்.

நீங்க உங்கட அம்மாவையே கூப்பிட்டு பாடமெடுத்தாலும், விளங்காத மாதிரி நடிக்கிறவங்களுக்கு விளங்காது ;-)

பாருங்களேன் உங்கள மூன்று முறை ரொம்ப சீரியசா பதில் சொல்ல வச்சிட்டாங்க.

அடுத்தடுத்து உங்களுக்கு என்ன நடக்கப்போகுதோ....

அது சரி சிநேகிதி, அது யார் படத்தில இருக்கிற பிள்ளை?

கொழுவி said...

//நான் "பெண்" என்டதால பெண் பால் "விகுதிய" என்ட பதிவுக்கு பெயரா வச்சன்.//

உங்கள் விளக்கம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தாராளமாக நீங்கள் இனி வலைப்பதியலாம். வரவேற்கிறோம். எங்கள் சார்பில் விசாரணைகளை மேற்கொண்ட மகளிர் விசாரணைக் கமிசன் அதிகாரி சிநேகிதிக்கு நன்றி.

சினேகிதி said...

ஆகா புரளியக் கிளப்ப கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...மயூரன் அண்ணா எங்களுக்கு இந்த பகிடிவதை எல்லாம் கேள்விஞானம் மட்டும்தான் அதைப்போய் கீர்த்தனா போல வாய்காரிட்ட எல்லாம் பரிசோதிச்சுப்பார்ப்பனா நான்:-)

படத்தில இருக்கிற பிள்ளை நான்தான்.

கீர்த்தனா said...

நன்றி மயூரன் என் சார்பு வழக்கறிஞராக களத்தில் இறங்கினதுக்கு.

நீதிபதி கொழுவி அவர்களின் உத்தரவு படி இனி யாராலும் தொந்தரவு வராது என்று நம்புகிறேன்.

:-)

நாமக்கல் சிபி said...

வாழ்த்தி வரவேற்கிரோம்!

வருக! வருக!

பகீ said...

வாங்க கீர்த்தனா,

சினேகிதி வலைச்சரத்தில செய்துவைச்ச அறிமுகம்தான் என்னை இங்க கூட்டிக்கொண்டு வந்து விட்டிருக்கு

தொடர்ந்து வலைப்பதிய வாழ்த்துக்கள்.

ஊரோடி பகீ

கானா பிரபா said...

காதோரம் லோலாக்கோட வந்திருக்கிறியள் வாம்மா மயிலு

ஜெயபாலன் said...

தமிழ் வலைப் பதிவுகள் பூத்துக் குலுங்குவது யார் யாரது என்று தெரியாமல் ஒரு எல்லயற்ற காட்டின் சுந்த்ந்திரத்தொடு விரிந்து செல்கிறது. புல்லின் பூவும் செடியின் பூவும் ரோஜாபோலவும் மககிழ்ழ் போல்லவும் நாகலிங்க பூவைப்போலலவும் அழ்கின் முழுமை என்பதை கடந்த வ்ருடம் ஆனைமலைக் காடுகளில் வாழ்ந்தபோது மேலூம் உணர்ந்தேஎன். எனது மூடியாத நாவலுக்காக கீர்தனாபோன்ற பல இளளயவர்களளது தளங்களில் இருந்து கற்றுக் கொள்கிறேஎன். வாழ்விம் மூழ்ழுமையான அழகும் அதன் வீடுபட்டதன்மையோடு வேறெங்கும் காணமுடீவதில்லை. இத்தனை சுதந்திரமான கலைப் பயணம் வேறெங்கும் கசாதியமும் இல்லை. வலைத் தளங்களில் இருந்தும் நாவலுக்கான தேட்டலை ஆரரம்பிக்க்கிறேன். ஒரு மாலைப் பொழுதில் பெண்கள் ஆய்வு மையத்தில்ல் கவிஞர் தி.பா கலந்துகொண்ட உரரையாடலின் பின்ன்னர் ஒரு சில்ல நிமடங்கள் பேசசிய கீர்த்தனாவா நீங்க்கள். அப்படியயாயின் ஒன்று சொல்ல வேண்டும். உங்களளல் 2005ல் வெளிவர வேஎண்டிய எனனது நாவல் (1824 - 2004 வரையில்லன பெண்களின் கதைகள் ) பாழாகிப் போனது. கூட்டம் மூடிந்து வண்டிக்கக தரித்தபோத்து தமிழ் நாவல்களின் உருவத்தைத் காரசசாரமாக நிரராகரித்துக் கொண்டிருந்தீர்கள். அன்றுபோய் எழுதியதை தூக்கிப் போட்டுவிட்டு தேடத் தொடங்கியதுதான் இன்னும் முடியவ்விலை.அந்தத் தேடலில்தான் +ள் வந்து சேர்ந்தது. இப்ப மீண்டும் பயமாய் இருக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்

கீர்த்தனா said...

வ.ஐ.ச.ஜெயபாலன்,
//இத்தனை சுதந்திரமான கலைப் பயணம் வேறெங்கும் கசாதியமும் இல்லை//
உண்மைதான்..!
நன்றி..உங்கள் பின்னூட்டத்திற்க்கு
நான் அதே கீர்த்தனா தான் :-)

உதயதேவன் said...

கீர்த்தனா...
உங்களட மொழி மிக அழகு....
யாழ் தமிழில் ஒரு +ள்
யார் அவள் என்று
அதிசயக்க செய்கிறது
நெருப்பாற்றில் பூத்த
குருஞ்சி மலராய்
தமிழும் அறிவியலும்
மண் வாசனையும்
மனித நேயமும்
மணமணக்க....
தமிழ் வலை உலகிற்கு
பாரதி கனவு கண்ட
ஒரு புதுமைப்பெண்...
வாழ்த்தி வரவேற்க்கும்
சகோதரன் உதயதேவன்

உதயதேவன் said...

கீர்த்தனா...
உங்களட மொழி மிக அழகு....
யாழ் தமிழில் ஒரு +ள்
யார் அவள் என்று
அதிசயக்க செய்கிறது!

நெருப்பாற்றில் பூத்த
குருஞ்சி மலராய்
தமிழும் அறிவியலும்
மண் வாசனையும்
மனித நேயமும்
மணமணக்க....
தமிழ் வலை உலகிற்கு
பாரதி கனவு கண்ட
ஒரு புதுமைப்பெண்...
வாழ்த்தி வரவேற்க்கும்
சகோதரன் உதயதேவன்