Tuesday, July 17, 2007

கருவறை

சுட்டெரிக்கும் ஒரு பகல் பொழுது…
அன்று சூரியன் மிக அருகில்
இருந்தது..

என் கண்ணால் ஓழுகும் நீர் கண்டு
தெரு நாய் ஒன்று என் கால் நக்கியது.
மனிதர்கள் .. ஏராளம். அங்குமிங்குமாய்
ஐந்துவை பார்ப்பதாய் .. பார்த்து ..
பார்த்து .. சென்றனர். .

என் இதயம் பெரிதாய் ஓலமிட்டது.
மனிதர் முன் அழாதே….
“அதை விட கேவலம் எதுவும் இல்லை”
கண் கேட்க மறுத்தது..
சல சல வென.. கண்வழி நீர் .. உடலையும்
நனைத்தது…


மனம் ஏதேதோ சொன்னது …
பரியத்துக்குரியவர் யாரும் நினைவில்
இல்லை….
தொலை பேசி எண்கள் ..
மூளையை விட்டு மிக வேகமாய் ஓடித்தொலைந்து…

ஒரு காலத்தில்….
எனக்கு எல்லாமுமாக இருந்த என் சொந்த வீடு
இன்னும் கொஞ்ச நேரத்தில் ..
வெட்டி அகற்றப்பட போகிறது..
என் தாயின் கருப்பை..


நான் சூன்யமானேன்..
வடிவமில்லா எழுத்துக்கள் .. சொற்களில்லா
மொழிகள் ..என ..நான் சூன்யமானேன்..

இல்லாத கடவுளர்களை எல்லாம் உதவிக்கு
அழைத்தேன்..
கடவுள் இல்லை என்று சொல்லி வாதிட்ட ..
என் வாதங்களை மீ்ட்டுக்கொள்ளுவதாக
கெஞ்சினேன்…

மண்டியிட்டு அதற்க்காக மன்னிப்பும் கேட்டேன். .
எதை நம்ப சொன்னாலும் நம்பும் நிலையில் இருந்தேன்..
ஐயோ .. நேத்தி கூட வைத்தேன்..

எனது பலம் என்னை விட்டு
தூர ஒடிப்போனது …
நான் ஒன்றுமில்லாதவள் ஆனேன். ..
மனதால் நிர்வாணமானேன்…

எல்லாம் முடிந்து இருக்க வேண்டும் ..
நான் சுய நினைவிற்க்கு வந்த போது..
அப்போது களைத்திருந்தேன்.